பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள தகவல்
பாடசாலைகளுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் வழங்கப்படவுள்ள விடுமுறைகள் தொடர்பில் தகவலொன்றை கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த வெளியிட்டுள்ளார்.
விடுமுறைகளில் மாற்றம்
அதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுபட்ட பாடத்திட்டத்தை ஈடுசெய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கோவிட் தொற்று நோய் காலத்தில் இருந்த நிலைமையில் இருந்து இன்றைய நிலைமை வேறுபட்டுள்ளது.
| எந்நேரமும் தயாராக இருக்குமாறு அரச ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்! தனியார்துறையினருக்கு விசேட அறிவிப்பு |
மேலதிக அமர்வுகள்
ஆரம்ப தரங்களுக்கான ஆசிரியர்களுக்கு ஜூலை மற்றும் செப்டெம்பர் மாதங்களில் மேலதிக அமர்வுகள் இருக்கும்.

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு செப்டெம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மேலதிக நிகழ்ச்சிகள் உட்பட மீட்டல் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படும்.
அத்துடன் வார இறுதிக்குள் எரிபொருள் நெருக்கடி ஓரளவுக்குத் தீர்க்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 21 மணி நேரம் முன்
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam