சிஐடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே எடுத்த அதிரடி முடிவு

CID - Sri Lanka Police Easter Attack Sri Lanka Udaya Gammanpila Suresh Salley
By Aanadhi Jun 06, 2026 11:41 AM GMT
Report

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, சாகும் வரையான உண்ணாவிரதமொன்றைத் தொடங்கியுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(6) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் பிவிதுரு ஹெல உருமய தலைவர் உதய கம்மன்பில இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மத்திய வங்கியிலிருந்து 808 மில்லியன் டொலர்கள் மாயம்..!

மத்திய வங்கியிலிருந்து 808 மில்லியன் டொலர்கள் மாயம்..!

 சாகும் வரை உண்ணாவிரதம்

சலேயின் மனைவி மற்றும் மகனின் வேண்டுகோளின் பேரில் ஊடகங்களிடம் பேசிய கம்மன்பில,

இந்த உண்ணாவிரதத்தின் போது, ​​அவர் உணவு மட்டுமல்லாமல், அத்தியாவசியமான தண்ணீர் மற்றும் மருந்துகளையும் மறுத்துவிட்டதாகக் கூறினார்.

சிஐடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே எடுத்த அதிரடி முடிவு | Suresh Saleh On Fast Until Death Udaya Gammanpila

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் தனக்கு இழைக்கப்பட்ட மனிதாபிமானமற்ற சித்திரவதை மற்றும் இழிவான நடத்தையைக் கண்டித்து, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சலே தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் நிலவும் மனிதாபிமானமற்ற நிலைமைகளை விளக்கிய கம்மன்பில, எடுத்துக் காட்டாக ஒரு சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார்.

அர்ச்சுனா எம்பி மீதான நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு கையெழுத்து வேட்டை

அர்ச்சுனா எம்பி மீதான நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு கையெழுத்து வேட்டை

மனநல பாதிப்பு

நேற்று இரவு, சலேவுக்கு உணவாக முள்ளங்கி குழம்புடன் ஒரு கரண்டி சோறு மட்டுமே வழங்கப்பட்டது என்றும், அதுவும் தட்டில் வைக்கப்படாமல், தரையில் விரிக்கப்பட்ட ஒரு செய்தித்தாள் பேப்பரில் வைத்து வழங்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

சிஐடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே எடுத்த அதிரடி முடிவு | Suresh Saleh On Fast Until Death Udaya Gammanpila

செய்தித்தாள் குழம்பில் நனைந்து கிழிந்து போனதால், உணவு அனைத்தும் தரையில் விழுந்துவிட்டதாகவும், அதனால் அவர் கடுமையான மனநல பாதிப்புக்கு உள்ளானதாகவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை சலேவின் சகோதரரும் மகனும் அவரைப் பார்க்கச் சென்றபோது, 'பொலிசார் என்னை ஒரு நாயை விட மோசமாக நடத்துகின்றனர்.. இதை அனுபவிக்க நான் என்ன தவறு செய்தேன்?' என்று அழுதுகொண்டே அவர் கேட்டுள்ளார்.

தாகத்தால் துடிதுடித்து உயிரிழந்த 49 பேர்! சஹாரா பாலைவனத்தில் பேரவலம்

தாகத்தால் துடிதுடித்து உயிரிழந்த 49 பேர்! சஹாரா பாலைவனத்தில் பேரவலம்

மனிதாபிமானமற்ற செயல்

​​ இத்தகைய மனிதாபிமானமற்ற சித்திரவதை மற்றும் பொய்க் குற்றச்சாட்டுகளின் கீழ் வாழ்வதை விட இறப்பதே மேல் என்று அவரைச் சுற்றிலும் நின்றிருந்த ஏழு பொலிஸ் அதிகாரிகளின் முன்னிலையில் சலே கூறியிருந்தார்.

சிஐடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே எடுத்த அதிரடி முடிவு | Suresh Saleh On Fast Until Death Udaya Gammanpila

சுரேஷ் சலே நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்படவில்லை என்றும், மாறாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தத் தடுப்புக் காவல் உத்தரவு ஏற்கனவே நீதிமன்றங்களின் முன்னிலையில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

முன்னாள் புலனாய்வுத் தலைவர் ஒருவருக்கு எதிரான இந்த நடவடிக்கை ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படுகிறது என்றும், இது மிகவும் வெட்கக்கேடானது மற்றும் மனிதாபிமானமற்றது என்றும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US