சுரேஷ் சலே - கோட்டாபயவுக்கு ஆபத்தாகும் வெளிநாட்டு கோடீஸ்வரர்
சுரேஷ் சலே தான் துன்புறுத்தப்படுவதாகவும் தனக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் அநியாயமான முறையில் பாவிக்கப்படுவதாகவும் கூறுவது ஒரு விசித்திரமான விடயமாக இருக்கின்றது என பிரித்தானியாவில் இருக்கும் மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்மந்தப்பட்டவர்கள்தான் அந்தக் காலப்பகுதியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளார்கள்.
ஆகவே இந்த விசாரணை அவ்வளவு எளிதாக முடிவுறுத்தப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விசாரணை முடிவடையாமல் ராஜபக்ச தரப்போ அல்லது இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களோ எந்த ஒரு மேற்கத்தேய நாட்டிற்கும் செல்லமுடியாத சூழலே தற்போது நிலவுகிறது.
இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையானது வெறுமனே NPP அரசாங்கத்தினால் மாத்திரம் முன்னெடுக்கப்படும் விடயமாக பார்க்க முடியாது.
இதற்குப் பின்னால் பல சர்வதேச நாடுகள், வெளிநாட்டுப் பிரஜைகள் பாரிய அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்......