புதிய அரசியல் யாப்பு தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Sri Lankan Tamils Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Thileepan Jan 19, 2026 06:39 AM GMT
Report

புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களுக்கு ஒத்துவரக் கூடிய ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்க தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றுபட்டு முன்வர வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்ற ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நந்தனவின் மரணம்:சர்ச்சையை கிளப்பியுள்ள அமைச்சர் லால் காந்தவின் பதிவு

நந்தனவின் மரணம்:சர்ச்சையை கிளப்பியுள்ள அமைச்சர் லால் காந்தவின் பதிவு

மாகாண சபைத் தேர்தல்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதில் 2026ஆம் ஆண்டுக்கான வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.

கட்சியினை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது. எதிர்வரும் மாதம் கட்சியின் மாநாட்டை கூட்டுவதற்கும் தீர்மானித்துள்ளோம்.

அத்துடன், காலத்தை பின்னடித்து செல்லாமல் மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாக உள்ளது. தமிழரசுக் கட்சி உட்பட ஏனைய தமிழ் கட்சிகளும் மாகாண சபைத் தேர்தலை வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

ஆகவே, அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை பின்னடிக்காமல் உடனடியாக நடத்த வேண்டும். எம்மைப் பொறுத்தவரை பழைய முறைப்படி மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும். அது தமிழ் மக்களது தேவையாகவும் கோரிக்கையாகவும் உள்ளது.

கரூர் விவகாரம் : 2ஆவது முறையாக விசாரணைக்காக முன்னிலையான தவெக தலைவர்

கரூர் விவகாரம் : 2ஆவது முறையாக விசாரணைக்காக முன்னிலையான தவெக தலைவர்

இது தொடர்பாக மலையக தமிழ் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள், மாகாண சபைத் தேர்தலை நடத்த விரும்பும் சிங்கள கட்சிகள் என்பனவும் வலியுறுத்தி வருகின்றன. 

புதிய அரசியலமைப்பு

அரசாங்கம் புதிய அரசியல் யாப்பை கொண்டு வருமாக இருந்தால், அந்த புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களது தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வாக என்ன விடயங்கள் உள்ளடக்கப் போகின்றார்கள் என்பதை தமிழர் தரப்புடன் அவர்கள் பேச வேண்டும்.

தமிழர் தரப்பு அதற்கான ஒரு பொது முடிவுக்கு வர வேண்டும். ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னனி போன்றன ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன் | Suresh Premachandran Speech

தீர்வு பொதுவிடயம், தமிழ் மக்களது நலன் சார்ந்த விடயம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களுக்கு ஒத்துவரக் கூடிய ஒரு தீர்வு திட்டத்தை முன் வைக்க வேண்டும்.

பல தீர்வுத் திட்டங்கள் ஏற்கனவே இருந்தாலும் கூட நாங்கள் ஒருமுகப்படுத்தி சரியான தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்ற தேவை உள்ளது. எல்லோரும் இணைந்து அதனை முன்வைக்க வேண்டும்.

மேலும், பயங்கரவாத தடைச்சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட வேண்டும். தற்போது புதிய வடிவத்தில் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டு வருவதை இலங்கையில் உள்ள புத்திஜீவிகள் அனைவரும் நிராகரித்துள்ளனர்.  

பிரஜாசக்தி

சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட அதனை நிராகரித்துள்ளது. இலங்கையின சட்டத்தில் இருந்து பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். சாதாரண குற்றங்களுக்கு இருக்கின்ற சட்டங்களை அதற்காக பயன்படுத்த முடியும்.

தற்போதைய அரசாங்கம் பிரஜாசக்தி என்ற பெயரில் ஒவ்வொரு கிராமத்திற்கும் தனது கட்சியினுடைய ஒரு பிரதிநிதியை நியமிக்கும் நிலையை பார்க்கின்றோம். ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் அதனை நாங்கள் பார்க்கின்றோம்.

2000 ரூபாய் நாணயத்தாள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய தகவல்

2000 ரூபாய் நாணயத்தாள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய தகவல்

இதேவேளை, ஒவ்வொரு கிராமத்திற்கும் பல உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அதனைத் தாண்டி பிரஜாசக்தி என்ற பெயரில் தமது கட்சி சார்ந்தவரை நியமிக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளார்கள்.

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன் | Suresh Premachandran Speech

அவர் யாருக்கு கட்டுப்பட்டவர் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருக்கு கீழ் உள்ளார். அவர் பிரதே செயலாளர் உட்பட யாருக்கும் கட்டுப்பட்டவர் அல்ல.

உண்மையாகவே மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை ஓரம் கட்டி தாம் நியமித்த உறுப்பினர்கள் ஊடாக வேலை செய்வது ஒரு ஜனநாயக விரோத செயற்பாடு. அதனை நிறுத்தப்பட வேண்டும். அவருக்குரிய தகைமை என்ன? இது சட்டவிரோத செயற்பாடு. அது நிறுத்தப்பட வேண்டும். தொடர்ந்தும் தமிழ் தரப்புக்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும் தீர்மானித்துள்ளோம் என உறுதியளித்துள்ளார்.      

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன் | Suresh Premachandran Speech

மரண அறிவித்தல்
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US