போதை வியாபாரத்தின் முக்கிய புள்ளிகளை கைது செய்ய மறுக்கும் அரசு - சுரேஷ் பிரேமச்சந்திரன் பகிரங்கம்

Sri Lanka Police Ranil Wickremesinghe Drugs
By Kajinthan Dec 24, 2023 03:33 PM GMT
Report

இரண்டு கோடியே 20 லட்சம் மக்கள் வாழக்கூடிய இலங்கை தீவில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் போதைப்பொருள் வியாபாரத்திலும் பாவனையிலும் ஈடுபட்டுள்ளார்கள் என்பது ஆச்சரியத்துக்குரிய ஒரு விடயமாக இருக்கின்றது என ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரது இல்லத்தில் இன்றையதினம் (24.12.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஒரு வாரமாக இலங்கையில் போதைவஸ்துக்களை ஒழிப்பதற்காக பொலிஸார், இராணுவம், அதிரடிப்படை மற்றும் முக்கியமான அமைப்புகளால் முழு இலங்கையிலும் போதைப்பொருள் பாவனையாளர்கள், போதைப்பொருள் வியாபாரம் செய்பவர்கள் என பல்லாயிரக்கணக்கானோரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். யுவதிக்கு பிரித்தானியாவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

யாழ். யுவதிக்கு பிரித்தானியாவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

போதைப்பொருள் வியாபாரம்

10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிக்கப்பட்ட சில பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் பலர் பொலிஸ் தடுப்பு காவலில் உள்ளதாகவும், ஏனைய பல பேர் சிறைச்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலான செய்திகள் தெரிவிக்கின்றன.

போதை வியாபாரத்தின் முக்கிய புள்ளிகளை கைது செய்ய மறுக்கும் அரசு - சுரேஷ் பிரேமச்சந்திரன் பகிரங்கம் | Suresh Premachandran Blame Government

இவ்வாறான கைதுகள் இடம்பெறும் நிலையில் இவ்வளவு காலமும் பொலிஸாரும், படையினரும், இலங்கை அரசாங்கமும் என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

அமைச்சர் கூறுகின்றார் போராட்டங்கள் நிகழ்ந்ததால் இந்த வேலைகளை செய்வதற்கு பொலிஸாரால் முடியவில்லை, இப்பொழுது தான் அவர்களுக்கு நேரம் கிடைத்திருக்கின்றது என்ற கருத்துப்பட அவர் கூறுவது ஒரு உண்மையான செய்தியாக எங்களுக்கு தெரியவில்லை.

கிராம மட்டங்களிலும், பாடசாலை மட்டங்களிலும் இந்த போதைப்பொருள்கள் வியாபாரம் செய்கின்ற தகவல்களை நீங்கள் திரட்டி இருக்கின்றீர்கள் என்றால் இதற்கு முன்னரே இதனை வளர விடாமல் கைதுகளை முன்னெடுத்து இருக்கலாம் என்பதுதான் எமது கருத்து.

யாழ் பல்கலைக்கழக மாணவி மரணம்: கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள உடற்கூறுகள்

யாழ் பல்கலைக்கழக மாணவி மரணம்: கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள உடற்கூறுகள்

கைது நடவடிக்கை

குறைந்தபட்சம் இப்போதாவது பொலிஸார் அந்த கைது நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது பாராட்டப்படக்கூடிய விடயம். ஆனால் முக்கியமான விடயம் என்னவென்றால் இங்கே இருக்கக்கூடிய முக்கியமானவர்கள், அதாவது இதற்கு முன்பு நாடாளுமன்றத்திலும் கூட பேசப்பட்ட என்னவென்றால் நாடாளுமன்ற உறுப்பினர்களை சிலர் இவ்வாறான செயற்பாடுகளில் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கின்றது.

போதை வியாபாரத்தின் முக்கிய புள்ளிகளை கைது செய்ய மறுக்கும் அரசு - சுரேஷ் பிரேமச்சந்திரன் பகிரங்கம் | Suresh Premachandran Blame Government

ஆனால் இதுவரை அவ்வாறு யாரும் கைது செய்யப்பட்டு இருப்பதாக எங்களால் அறிய முடியவில்லை. அத்துடன் இந்தப் போதைப்பொருள்களை பெருமளவில் கடத்துகின்ற அல்லது விற்பனை செய்கின்ற முக்கியஸ்தர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

ஆகவே அவ்வாறு இருக்குமானால் கைது செய்யப்படுபவர்கள் கிராம மட்டங்களில் சிறியளவில் வியாபாரம் செய்பவர்களாக தான் இருக்க வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இங்கே முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த போதைப்பொருடாகளை இலங்கைக்குள் கொண்டு வந்து வியாபாரம் செய்யும் முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட வேண்டும்.

கொழும்பு துறைமுக உத்தேச மையத்திற்கு வரி விலக்கு

கொழும்பு துறைமுக உத்தேச மையத்திற்கு வரி விலக்கு

ஏமாற்றுத்தனமான வேலை

வேறு நாடுகளில் இருந்து இனிமேல் போதைப்பொருட்க்கள் இலங்கைக்குள் வராத அளவிற்கு அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட்டால் தான் இந்த போதைவஸ்தினை இல்லாது ஒழிப்பதற்கான வழிமுறையை மேற்கொள்ள முடியும்.

இல்லாது விட்டால் ஒரு பத்தாயிரம் பேரை கைது செய்தாலும் அவர்கள் இன்னும் ஒரு பத்தாயிரம் பேருக்கூடாக இந்த வியாபாரத்தை தொடங்கி நடத்துவார்கள் என்பது தான் கவலைக்குரிய விடயம்.

முக்கிய புள்ளிகள் கைது செய்யப்படாமல் அவர்கள் வொளியில் இருக்கும் வேளையில் அமைச்சரும் பொலிஸாரும் இணைந்து பெரிய காரியங்களை செய்து முடித்தது போன்று விழாக்களை கொண்டாடுவது என்பது சரியான செயற்பாடல்ல. இலங்கை அரசாங்கமும் பொலிஸாரும் பாரிய சாதனைகளை புரிந்திருக்கின்றார்கள் என்ற படத்தினை மக்களுக்கு காண்பிப்பதற்கு அவர்கள் விரும்பலாம்.

ஆனால் முக்கியமாக அப்படியான படங்களை காட்டுவதற்கு முன்பாக முழுக்க முழுக்க இதனை கை கொண்டு நடத்துபவர்களை கைது செய்த பின்னர் இந்த விழாக்களை கொண்டாடுவார்களாக இருந்தால் அது ஒரு அர்த்தமுள்ளதாக இருக்கும். இல்லா விட்டால் இது ஒரு ஏமாற்றுத்தனமான வேலையாகத்தான் இருக்கும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி

27 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US