எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவிப்பு
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும், போதியளவு கையிருப்பை வழங்குவதற்காக எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் எரிபொருளை விநியோகிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்றைய தினம் (02.06.2023) டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் மேலும், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெட்ரோலிய களஞ்சிய முனையம் ஆகியவற்றுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டிற்கான காரணம்
விலை குறைப்பை எதிர்பார்த்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள், கடந்த சனிக்கிழமை, முன்பதிவுக் கட்டளைகளை வழங்காமை மற்றும் குறைந்தபட்ச கையிருப்பை பேணாமை என்பன, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விலை குறைப்பு மற்றும் எரிபொருள் ஒதுக்கம் அதிகரிப்புக்குப் பின்னர், பொதுமக்களின் உடனடித் தேவை அதிகரித்தமையும் இதற்கு காரணமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Instructions has been given to CPC & CPSTL to continue fuel deliveries on Saturday & Sunday this week to supply sufficient stocks to all fuel stations. To reduce expenses on overtime, CPC & CPSTL has not been operating on Sundays & Public holidays in the last 4 months. Non… pic.twitter.com/9b4jIjmJpS
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 2, 2023







குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam
