யாழ். தொழிநுட்ப கல்லூரிக்கு பல இலட்சங்கள் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைப்பு (Video)
கனடாவில் இருக்கக்கூடிய நந்தகுமார் என்ற நந்தன் 22 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை யாழ்ப்பாண தொழிநுட்ப கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி மூலமாக குறித்த பொருட்கள் இன்றைய தினம் (06.11.2023) கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளன.
நில அளவு குறித்த கற்கைகளில் ஈடுபடும் பிள்ளைகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்கள் இன்றி மாணவர்கள் படும் அவதியை கடந்த 3 மாதங்களுக்கு முன், லங்காசிறி ஐபிசி தமிழ் ஊடக வலையமைப்பின் தலைவரும், புலம்பெயர் தமிழ் தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரன் காணொளியொன்றின் மூலம் வெளிக்கொணர்ந்திருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த கல்லூரியின் பழைய மாணவரான நந்தகுமார் இலங்கைக்கு வந்திருந்த நிலையில், கந்தையா பாஸ்கரன் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக முதற்கட்டமாக குறித்த பொருட்களை கல்லூரிக்கு மிஸ்டர் கொங்கிரீட் என்ற அவருடைய நிறுவனத்தின் ஊடாக பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்த உதவியை வழங்கிய கனடாவில் இருக்கக்கூடிய நந்தகுமார் என்ற நந்தனுக்கு லங்காசிறி ஐபிசி தமிழ் ஊடக வலையமைப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.














யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri