கொள்கலனில் எரிபொருள் விநியோகம்: இருவர் கைது
வவுனியா - புளியங்குளத்தில் கொள்கலனில் எரிபொருள் விநியோகம் செய்தமை குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா - புளியங்குளம் பகுதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று எரிபொருள் விநியோகம் இடம்பெற்றபோதே அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய எரிபொருள் அட்டை நடைமுறை சீராக பின்பற்றப்படாது எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளதுடன், சில வாகனங்களுக்கு அரசாங்கத்தால் அறிவுறுத்தல் வழங்கப்பட்ட அளவுகளை விட அதிகமாக எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எரிபொருள் அட்டை முறை
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை கட்டுப்படுத்தும் முகமாக அரசாங்கத்தினால் நாடு முழுவதும் எரிபொருள் அட்டை முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எரிசக்தி அமைச்சால் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு கடந்த முதலாம் திகதி முதல் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மேலதிக விசாரணைகள்
இந்த நிலையிலேயே பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கொள்கலன் ஒன்றில் எரிபொருள் எடுத்துச் சென்றவர் கைது செய்யப்பட்டதுடன், குறித்த நபருக்கு எரிபொருள் விநியோகம் செய்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரும் புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இருவரையும் நீதிமன்றில்
முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 17 மணி நேரம் முன்
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri