விரைவில் இந்தியா செல்லவுள்ள சுனிதா வில்லியம்ஸ்
நாசா (NASA) விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், தனது தந்தையின் சொந்த நாடான இந்தியாவுக்கு விரைவில் செல்ல திட்டமிட்டுள்ளார்.
பயணத்தின் போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (இஸ்ரோ) சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விண்கலம் இமயமலையை கடந்து செல்லும்
ஒன்பது மாதங்கள் விண்வெளியில் தங்கியிருந்தபோது, ஒவ்வொரு முறையும் தனது விண்கலம் இமயமலையை கடந்து செல்லும் சந்தர்ப்பத்தில், இந்தியாவின் அதிசயத்தை பார்த்ததாக அவர் கூறியுள்ளார்.

விண்வெளியில் தனது அனுபவத்தை இஸ்ரோவுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும், சக ஜனநாயக நாடான இந்தியா விண்வெளித் துறையில் கால் பதித்திருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
விண்வெளிப் பயணத்திற்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் பிரவேசித்த சுனிதா வில்லியம்ஸ், தான் பயணித்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் 09 மாதங்கள் மையத்தில் சிக்கிக் கொண்டார்.
அதன் பிறகு அமெரிக்காவின் சிறப்பு விண்வெளிப் பயணத்தின் மூலம் மீண்டும் பூமியை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam