சீனியின் விலை உயர்த்தப்படக்கூடிய சாத்தியம்
சீனியின் விலை உயர்த்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் சீனி இறக்குமதியை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாகவும் இதனால் சீனியின் விலை உயரக் கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது எனவும் தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனி இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரங்கள் கடந்த 22ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்படுவதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் தமயந்தி எஸ் கருணாரட்ன அறிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் காரணமாக சுமார் நாற்பது அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொண்ட சீனி இறக்குமதியாளர்களினால் இறக்குமதி செய்யப்படவிருந்த இரண்டு லட்சம் மெற்றிக் தொன் எடையுடைய சீனி இறக்குமதி இடைநிறுத்தப்படும் என ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுப் பணியகத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவி வரும் டொலருக்கான கையிருப்பு பிரச்சினையினால் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
சீனி இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதனைத் தொடர்ந்து வெள்ளை மற்றும் சிவப்பு சீனியின் மொத்த விற்பனை விலைகளை சில மொத்த வியாபாரிகள் உயர்த்தியுள்ளனர்.
இனி வரும் நாட்களில் சீனியின் சில்லறை விற்பனை விலை உயர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அந்த தெற்கு ஊடகம் தெரிவித்துள்ளது.
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri