இலங்கையில் திடீரென கோடீஸ்வரரான நபர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
இரத்தினபுரி, பொத்தப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெனிக்திவெல திருவானை பிரதேசத்தில் திடீரென நபர் ஒருவர் கோடீஸ்வரராகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர், பாரிய கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாக, சம்பாதித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு எதிராக பண மோசடி சட்டத்தின் கீழ் கண்டி பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சட்டவிரோத பணம்
அவர்,குறுகிய காலப்பகுதியில் சுமார் 2 கோடி ரூபா செலவில் வீடொன்றை நிர்மாணித்துள்ளார். இதற்கான பணத்தை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், 45 லட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் அவரிடம் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் விசாரணை
குறித்த நபர் இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவில் இணைந்திருந்தமையும் பின்னர் அங்கிருந்து வெளியேறியமையும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த வீட்டில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றின் பெறுமதி 22 லட்சம் ரூபாய் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam
