நெடுங்கேணியில் வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சோதனை நடவடிக்கை
வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியிலுள்ள கடைகள் மற்றும் மரக்கறிகள் விற்பனை நிலையங்கள் மீது திடீர் சோதனை மேற்கொண்டதுடன், முகக்கவசம் அணியாதவர்கள், சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றாதவர்கள் மீது சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டில் கோவிட்- 19 மூன்றாவது அலையின் தாக்கம் வேகமாக அதிகரித்து வரும்
நிலையில், வவுனியா வடக்கு பகுதியில் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார
நடைமுறைகள் தொடர்பாக பொலிஸாரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் நெடுங்கேணி பகுதியில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸார் வீதியோர வர்த்தக நிலையங்கள், மரக்கறிக் கடைகள், பழக்கடைகள் என்பவற்றைப் பார்வையிட்டுள்ளனர்.
அத்துடன் அங்கு சுகாதார நடைமுறைகளைப் பேணாதோர், முகக்கவசம் அணியாதோர், முகக்கவசத்தை சீராக அணியாதோர் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளைப் பதிவு செய்ததுடன், பொலிஸாரால் குறித்த நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சுகாதார நடைமுறைகளை மீறிய ஐந்து கடைகள் உடனடியாக பூட்டப்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸாரால்
சுகாதார அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri