இலங்கை முழுவதும் திடீர் மின் தடை.!
புதிய இணைப்பு
மின்சார விநியோகத்தை விரைவாக வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார்.
இன்று காலை மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட சமச்சீரற்ற காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், மின்சாரம் முழுமையாக வழமைக்கு திரும்புவதற்கு பல மணிநேரம் ஆகும் என்று உதயங்க ஹேமபால மேலும் தெரிவித்தள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலாம் இணைப்பு
நேரம் - 11: 26 - நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பின் சில பகுதிகளிலும் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது. மேலும், ஹட்டன் உள்ளிட்ட பிரதேசங்களிலும் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக வியாபார நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தற்போது ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான நிலையை சரிசெய்வதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்துள்ளது.

மேலும், இந்த திடீர் மின்தடைக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், மறுசீரமைப்பு முயற்சிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பொறுமையாக இருக்குமாறும் மின்சார சபையினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri