இலங்கையில் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய மின்தடைக்கான காரணம்
புதிய இணைப்பு
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடை குறித்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மின் தடைக்கான காரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்கு மோதியதால் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக மின்துறை அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் மின்சார விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், இதனால் மின்சாரம் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் பின்னர் இந்த நிலைமையை "பாணந்துறை துணை மின்நிலையத்தில் அவசரநிலை" என்று விவரித்துள்ளது.
இந்நிலையில், மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதோடு, இந்த மின் தடைக்கான அதிகாரபூர்வ விளக்கத்தை இலங்கை மின்சார சபை (CEB) இன்னும் வெளியிடவில்லை.
முதலாம் இணைப்பு
தேசிய மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட சமச்சீரற்ற நிலைமை காரணமாக நாடளாவிய ரீதியில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் அறிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் ஒரு மணித்தியாலமாக திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், திடீர் மின் தடைக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், மறுசீரமைப்பு முயற்சிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பொறுமையாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
