புதுடெல்லி பாணியில் பாகிஸ்தானில் திடீர் குண்டுவெடிப்பு.. பலர் பலி!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகமொன்றில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் இன்றையதினம் (11.11.2025) தற்கொலை குண்டுதாரியால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, 21 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொல்லப்பட்டவர்களிலும் காயமடைந்தவர்களிலும் பெரும்பாலானோர் சட்டத்தரணிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி தாக்குதல்
நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்குள் பொருத்தப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டரால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
🚨 BREAKING: Explosion outside Islamabad’s Judicial Complex — reports confirm a car bomb near the district court. 5–6 dead, 8+ injured, chaos caught on video as crowds flee through smoke and debris. 💥
— RAJA BHAIYA (@RAJA_BHAIYA_371) November 11, 2025
Comes just a day after the Delhi blast, intensifying India–Pakistan tensions.… pic.twitter.com/lPtbHHv6ot
இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் குண்டுவெடிப்பு நடந்த மறுதினமான இன்று இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற்பகல் 12.30 மணியளவில் நடந்த இந்த குண்டுவெடிப்பின் சத்தம் ஆறு கிலோமீட்டர் வரை கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri