வவுனியாவில் திடீரென மயங்கி விழுந்தவர் மரணம்
வவுனியா, கற்குளம் படிவம் 3 பகுதியில் திடீரென மயங்கி விழுந்த நபரொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கற்குளம் படிவம் 3 பகுதியில் வசிக்கும் 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் குறித்த நபர் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
எனினும், வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே அவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த நபருக்கு கோவிட் தொற்று உள்ளதா என பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.



