சூடானில் தொடரும் தீவிர பதற்றம்! உயிரியல் ஆபத்து தொடர்பில் உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை
சூடானில் நடந்து வரும் மோதலில் சிக்கியுள்ள ஒரு ஆய்வகத்தில் "உயிரியல் அபாயத்தின் அதிக ஆபத்து" இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
தலைநகர் கார்ட்டூமில் உள்ள தேசிய பொது சுகாதார ஆய்வகத்தை ஆக்கிரமித்ததன் பின்னணி இந்தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
சூடானில் இராணுவத்துக்கும் துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே நடைபெறும் சண்டையால் அங்கு நகரங்கள் முற்றாக சிதைந்து விட்டது.
இந்நிலையில், இனி ஆய்வகத்தை அணுக முடியாது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
மேலும், மின்வெட்டு காரணமாக ஆய்வகத்தில் உள்ள பொருட்களை சரியாக நிர்வகிக்க இயலாது என்று எச்சரித்துள்ளது.
ஆய்வகத்தில் உயிரியல் மற்றும் இரசாயனப் பொருட்கள் அதிக அளவில் சேமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தட்டம்மை மற்றும் காலரா நோய்க்கிருமிகள் மற்றும் பிற அபாயகரமான பொருட்களை இவ் ஆய்வகம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மின்சாரம் இல்லாததால், ஆய்வகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இரத்த சேமிப்பு பைகள் கெட்டுப்போகும் அபாயம் உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
