ஜனாதிபதியை சந்தித்தார் சுப்பிரமணியன் சுவாமி!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி (Subramanian Swamy) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.
பல அமைச்சுப் பொறுப்புக்களை வகித்திருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான நட்புறவுக்காக முன்னிலை வகித்திருப்பதோடு, இலங்கையில் நிலவிய பயங்கரவாத நடவடிக்கைகளைத் தோற்கடிப்பதற்கான இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தியவராவார்.
பொருளாதார நிபுணரும் புள்ளியியல் வல்லுநருமான சுப்பிரமணியன் சுவாமி, ஜனாதிபதி கோட்டபாய ராஜபகச் பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்த காலப்பகுதியில் நடத்தப்பட்ட மாநாடுகளின் போது, விரிவுரையாளராகவும் கலந்துகொண்டிருந்தார்.
இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமியின் இலங்கை விஜயதின் போது சந்திக்கக் கிடைத்தமையிட்டு, மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம் இலங்கை வந்த சுப்பிரமணியன் சுவாமி அலரி மாளிகையில் இடம்பெற்ற நவராத்திரி விழாவில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 19 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan