பாடசாலை நிகழ்வில் செலவிடப்பட்ட பெருந்தொகை பணம்! குழப்பத்தில் அதிகாரிகள்
தங்காலை பிரதேசத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் மாணவ தலைவர்களுக்கான அதிகாரப்பூர்வ பேட்ஜ் அணிவிக்கும் விழாவிற்கு ரூபாய் 10 இலட்சத்துக்கு அதிகமான தொகையை செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாடசாலைகளில் வெளிப்புற நடவடிக்கைகளுக்காக பெற்றோர்களிடமிருந்து எந்தவித கட்டணங்களும் அறவிடக் கூடாது என்று கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்த நிலையிலும் விழாவிற்காக பணம் அறவிடப்பட்டு பெருந்தொகை செலவிடப்பட்டுள்ளது.
கருப்பொருளை மீறிய நாடகம்
இது குறித்து தென் மாகாண கல்வி அதிகாரிகளும் பெரும் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 16ஆம் திகதி பாடசாலைக்கு வெளியேயுள்ள ஒரு இடத்தில் நடத்தப்பட்ட இந்த விழாவிற்கு, தங்காலை வலய கல்வி அலுவலகத்தில் முறையான அனுமதியின்றி மாணவர்களையும் பங்கேற்க செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அந்த நிகழ்வின்போது பாடசாலையின் மாணவர்கள் சிலர் இணைந்து ஒரு நாடகத்தை அரகேற்றியிருந்தாகவும், அந்த நாடகம் மாணவர்களுக்கு முன்மாதிரியாக அமைய வேண்டிய விடயங்களை மீறிய கருப்பொருளில் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam