கந்தளாய் பகுதியில் கணிதப் பிரிவில் பெறுமை சேர்த்த மாணவி
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, கணிதப் பிரிவில் மாணவி பைரூஸ் பாத்திமா சிம்லா A2B என்ற சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, திருகோணமலை மாவட்ட மட்டத்தில் 23ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இந்த சாதனையின் மூலம் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
தி/ அல்-தாரிக் மஹா வித்தியாலயத்தில் இருந்து பொறியியல் (Engineering) துறைக்கு தெரிவான முதல் மாணவி என்ற வரலாற்றுப் பெருமையையும் சிம்லா பெற்றுள்ளார்.
வெற்றியின் பின்னணி
இந்த வெற்றிக்குப் பின்னால் மாணவியின் விடாமுயற்சி, கட்டுப்பாடான மற்றும் திட்டமிட்ட கற்றல் முறைகள் முக்கிய பங்காற்றியுள்ளன.

அதேவேளை, அவரது பெற்றோரின் உறுதியான நம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களும் இவ்வெற்றிக்கு வலுவான ஆதாரமாக அமைந்துள்ளன.
இந்த வரலாற்றுச் சாதனையை முன்னிட்டு பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் மாணவி சிம்லாவுக்கு தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri