ஊஞ்சலில் இருந்து விழுந்து மாணவன் பலி
மொறட்டுவை மொறட்டுமுல்ல வில்லோராவத்த பிரதேசத்தில் பாடசாலை மாணவர் திடீர் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மதியம் நடந்துள்ளது.
அரச பாடசாலை ஒன்றில் பயின்று வந்த இந்த மாணவர், மதிய இடைவேளையின் போது, மேலும் சில மாணவர்களுடன் பாடசாலையில் இரும்பில் செய்யப்பட்டிருந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த போது கிழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த மாணவர், லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
14 வயதான இந்த மாணவர், மொறட்டுவை இதிபெத்த பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவனின் சடலம் நீதவான் விசாரணைகளின் பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மொறட்டுமுல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam
