ஊஞ்சலில் இருந்து விழுந்து மாணவன் பலி
மொறட்டுவை மொறட்டுமுல்ல வில்லோராவத்த பிரதேசத்தில் பாடசாலை மாணவர் திடீர் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மதியம் நடந்துள்ளது.
அரச பாடசாலை ஒன்றில் பயின்று வந்த இந்த மாணவர், மதிய இடைவேளையின் போது, மேலும் சில மாணவர்களுடன் பாடசாலையில் இரும்பில் செய்யப்பட்டிருந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த போது கிழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த மாணவர், லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
14 வயதான இந்த மாணவர், மொறட்டுவை இதிபெத்த பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவனின் சடலம் நீதவான் விசாரணைகளின் பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மொறட்டுமுல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 3 மணி நேரம் முன்
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri