ஊஞ்சலில் இருந்து விழுந்து மாணவன் பலி
மொறட்டுவை மொறட்டுமுல்ல வில்லோராவத்த பிரதேசத்தில் பாடசாலை மாணவர் திடீர் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மதியம் நடந்துள்ளது.
அரச பாடசாலை ஒன்றில் பயின்று வந்த இந்த மாணவர், மதிய இடைவேளையின் போது, மேலும் சில மாணவர்களுடன் பாடசாலையில் இரும்பில் செய்யப்பட்டிருந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த போது கிழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த மாணவர், லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
14 வயதான இந்த மாணவர், மொறட்டுவை இதிபெத்த பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவனின் சடலம் நீதவான் விசாரணைகளின் பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மொறட்டுமுல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
