யாழில் சட்டவிரோத மதுபானத்தை உடமையில் வைத்திருந்த மாணவன்: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லீட்டர் கசிப்புடன் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, குறித்த மாணவனை அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள சான்று பெற்ற சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்ற நீதவான் நேற்று(03.10.2022) உத்தரவிட்டுள்ளது.
குற்றச் செயல்
இந்த மாணவன் 3 லீட்டர் கசிப்பு மற்றும் 16 லீட்டர் கோடாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் உத்தரவு
கைது செய்யப்பட்ட சிறுவனை விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் சிறுவர்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே சிறுவனை நன்னடத்தை பாடசாலையில்
ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 நிமிடங்கள் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
