கொட்டகைகள் அடாத்தாக பிடுங்கி எறியப்பட்டதாக தெரிவித்து ஏ9 வீதியை மறித்து போராட்டம்

Protest
By Independent Writer Feb 18, 2021 07:04 PM GMT
Independent Writer

Independent Writer

in இலங்கை
Report

  கிளிநொச்சி - பளை, கரந்தாய் பகுதியில் வசிக்கும் மக்களின் கொட்டகைகள் அடாத்தாக பிடுங்கி எறியப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பளை கரந்தாய் கிராமத்தில் 1976ஆம் ஆண்டு மக்கள் குடியேறி இருந்தனர்.  

அதன்பின் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமா பல்வேறு இடங்களுக்கு சென்ற மக்கள் போர் நிறைவடைந்ததன் பின் 2010ஆம் ஆண்டு மீண்டும் கரந்தாய் கிராமத்தில் குடியேறியுள்ளனர்.

அவ்வாறு குடியேறி இருந்த மக்களை தென்னை பயிர்ச்செய்கை சபையினர் மக்கள் குடியேறி இருக்கும் காணி தமக்குரிய காணி என தெரிவித்து 2015 மக்களை அவ்விடத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

இதனை அடுத்து மக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பயன் கிடைக்காத நிலையில் யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இதன் பயனாக மக்களுடைய காணிகளை இருவாரங்களுக்குள் மக்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு கடந்த வருடம் ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் காணிகளை மக்களிடம் கையளிக்குமாறு பல தடவைகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உரியவர்களுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில் மக்கள் குறித்த காணிகளுக்குள் கடந்த இரண்டு வருடங்களாக தற்காலிக கொட்டில்களை அமைத்து வசித்து வருகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நேற்று அங்கு வந்த தென்னை பயிர்ச்செய்கை சபையினர் மற்றும் பளை பொலிஸார் மக்கள் கொட்டில் போட்டு குடியிருந்த வீடுகளை அடாத்தாக பிடுங்கி மக்களை தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து சேதமாக்கப்பட்ட கொட்டகைகள் மற்றும் தூக்கி வீசப்பட்ட வீட்டு பாத்திரங்கள் என்பவற்றை கிளிநொச்சி - கரந்தாய் ஏ9 வீதியில் போட்டு வீதியை மறித்து மக்கள் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இப்போராட்டம் காரணமாக ஏ9 வீதி சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு மேல் முடக்கப்பட்டு இருந்த நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த பளை பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். கலந்துரையாடலின்போது தென்னை பயிர்ச்செய்கை சபையினரால் சேதமாக்கப்பட்ட கொட்டகைகளை மீண்டும் போட்டு தருவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக பளை பொலிஸார் வாக்குறுதி வழங்கியதை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.  

GalleryGallery
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்கேணி, Bunde, Germany

24 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US