மீண்டும் ஆரம்பமான தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம்
தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டமானது மீண்டும் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த விகாரையானது பொதுமக்களது காணிகளை அபகரித்து அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளது. எனவே அதனை அகற்றுமாறு கோரி ஒரு வருட காலமாக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருக்கின்றது.
வழிபாடுகள்
இந்நிலையில், பௌர்ணமி தினத்தை முன்னிட்டு குறித்து விகாரையில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் முகாமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா
கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள்
மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






50 லட்ச ரூபாய் வேலையை விட்டுவிட்டு மோமோஸ் பிசினஸ் துவக்கிய நபர்: அவரது இன்றைய வருமானம் News Lankasri
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri