வானிலை தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை
இலங்கையின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் கடுமையான மின்னலுக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
மத்திய, வடமேற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்த மையம் எச்சரித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக காற்றும் வீசக்கூடும். இந்தநிலையில்
மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள்
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.