இந்திய கடற்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கடும் கண்டனம்!முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
முல்லைத்தீவு கடற்றொழில் சம்மேளனம் இந்திய கடற்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நிகழ்த்தி தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
படகுகளை விடுவிக்க வேண்டாம்
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் சம்மேளன தலைவர் வி.அருள்நாதன் வண்ணாங்குளம் கிராமிய கடற்றொழில் சங்க தலைவர் வே.சிவகுமார் ஆகியோர் இதன்போது கருத்து தெரிவித்துள்ளனர்.
இதன்போது இந்திய கடற்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கடும் கண்டனத்தை வெளியிடுவதாகவும் முல்லைத்தீவு கடற்றொழில் சம்மேளனம் படகுகளை விடுவிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.