தொழில் நிறுவனங்களுக்கு சுகாதார பிரிவின் கடுமையான எச்சரிக்கை
காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களை பணிக்கு அழைக்க வேண்டாம் என பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் அனைத்து நிறுவனங்களின் பிரதானிகளிடமும் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறான நோயாளிகளை பணிக்கு அழைப்பதனால் முழு நிறுவனத்திற்கும் கொவிட் ஆபத்து ஏற்பட கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஊழியர்கள் தொடர்பில் தீவிரமான அவதானம் செலுத்துமாறு அவர் எச்ச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, குளிரூட்டி பொருத்தப்பட்டுள்ள இடங்களில் அல்லது முழுமையாக அடைக்கப்பட்டுள்ள இடங்களில் முகக் கவசமின்றி ஒன்றாக சாப்பிடுவது, கதைப்பது அல்லது தேனீர் குடிப்பது போன்ற விடயங்களை தவிர்க்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலர் ஒன்றாக சேர்ந்து உணவு உட்கொள்வதனால் கோவிட் வேகமாக பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார பிரிவின் பிரதானிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan