மேல் மாகாண பேருந்து பயணிகளுக்கு விசேட அறிவிப்பு! கடுமையாகும் சட்டம்
மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் டிக்கெட் வழங்காத நடத்துனர்கள் மற்றும் டிக்கெட் பெறாத பயணிகள் மீது நேற்று முதல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தச் சட்டத்தை மீறும் நடத்துனர்கள் 3 நாள் இடைநீக்கம் மற்றும் அபராதம் விதிக்கப்படும். அதே நேரத்தில் டிக்கெட்டுகளை தங்கள் வசம் வைத்திருக்காத பயணிகளும் அபராதம் செலுத்த வேண்டும்.
மேல் மாகாணத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் டிக்கெட் வழங்குவது கடந்த மாதம் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டது.
பயணிகளுக்கு விசேட அறிவிப்பு
அதற்கமைய, கடந்த 14 நாட்களில், பேருந்துகளில் டிக்கெட் வழங்குவது முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்று ஆய்வு நடத்தப்பட்டது.
அந்த காலகட்டத்தில், டிக்கெட் இல்லாத பயணிகளுக்கும், டிக்கெட் வழங்காத நடத்துனர்களுக்கும் மட்டுமே எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன.
எனினும் சட்டத்தை மீறும் பயணிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிரான கடுமையான சட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.





சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
