கியூ.ஆர் குறியீட்டு அட்டை பாவனையில் கடுமையான நடைமுறை
இலங்கையில் நிலவிய எரிபொருள் நெருக்கடி, தேசிய எரிபொருள் நடைமுறைக்காக முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எரிபொருள் நிரப்புவதற்கு பிறரின் கியூ.ஆர் குறியீடுகளை திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறான மோசடி சம்பவங்களை தடுக்க எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப ரீதியான நடைமுறை
இதற்கு தேவையான தொழில்நுட்ப ரீதியான பாதுகாப்பு நடைமுறைகளை தமது நிறுவனம் தயாரித்து வருவதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பணிப்பாளர் தசுன் ஹகொட தெரிவித்துள்ளார்.

கியூ.ஆர் குறியீட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை வேறொருவர் கொள்வனவு செய்தால் அவரிடமிருந்து கியூ.ஆர் பதிவினை அழித்துவிட்டு பெற்றுக்கொள்ளுமாறும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam