ஆசிரியர்களைத் தடுத்து நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை! - அமைச்சர் வீரசேகர எச்சரிக்கை
"பாடசாலைகளுக்கு வருகை தர விரும்பும் ஆசிரியர்களை எவராவது தடுத்து நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கக் கூட்டமைப்பினருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"பயங்கரவாதம் உருவாவதற்கு வழிவகுத்த காரணி சரியாக இருக்கலாம். அவ்வாறு இல்லாவிட்டால் தவறாக இருக்கலாம். எனினும், அந்தவொரு காரணத்துக்காகவும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது. ஏனெனில் அதன்மூலம் மக்களே பாதிக்கப்படுவார்கள்.
அதேபோல் ஆசிரியர்களின் பிரச்சினை நியாயமானதாக இருக்கலாம். அதற்காகத் தொழிற்சங்க நடவடிக்கையை அனுமதிக்க முடியாது. இதனால் மாணவர்களே பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, பாடசாலைகளுக்குச் சமூகமளித்து, கல்வி நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு ஆசிரியர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.
அவ்வாறு வரவிரும்பும் ஆசிரியர்களுக்கு எவராவது அச்சுறுத்தல் விடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam