கட்டுப்பாடுகளை மீறும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை
கட்டுபாடுகளை மீறி மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்தார்.
மாகாணங்களுக்கு இடையில் வைத்தியசாலை ஊழியர்களின் போக்குவரத்திற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களை தவறாக பயன்படுத்தி போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தாலும் வைத்தியசாலை ஊழியர்களுக்காக மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்காக 17 பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகளுக்கு அதிக கட்டணத்தை அறவிட்டு, பயணிகளை அழைத்துச்செல்வதாக முறைப்பாடு கிடைத்துள்ளதென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டினார்.

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam
