விருந்தகங்களுக்கான இணைய முன்பதிவு தளங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை
விருந்தகங்களுக்கான (Hotel) இணைய முன்பதிவு தளங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் உரையாற்றிய அவர், இந்தத் துறையில் ஒரு நிறுவனத்தின் ஆதிக்கத்தை முறியடிக்க பல முன்பதிவு தளங்களை அறிமுகப்படுத்த உள்ளூர் நிறுவனங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை. நடத்தி வருவதாக கூறியுள்ளார்.
விருந்தக இணைய முன்பதிவு
Booking.com உள்ளிட்ட தற்போதைய தளங்கள் இலங்கையில் அதிகார பூர்வமாக பதிவு செய்யாமல், வரிகளை செலுத்தாமல் செயற்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள இலங்கையர்கள் குழு, விருந்தக இணைய முன்பதிவுகளில் ஏகபோகத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, மாற்று OTP அடிப்படையிலான தளத்தை உருவாக்கியுள்ளது என்றும் ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
