12 நாட்களின் பின் கட்டப்படும் ட்ரம்பின் கைகள்! அமெரிக்காவின் விபரீத முடிவு
இன்னும் 12 நாட்களில் அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றம் முடிவுக்கு வரும் எனவும், ஈரானை தரை வழியாக தாக்க முயன்றால் அமெரிக்கா மீள முடியாத நிலைக்கு தள்ளப்படும் எனவும் பிரித்தானியாவில் வசிக்கும் அரசியல் ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் தி. திபாகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்கா - ஈரான் போர் தொடர்பாக ஈரான் மிக முக்கியமான நுட்பமான உத்தியை கையாண்டுள்ளது. அந்நாட்டின் 12 மாநிலங்களும் தன்னிச்சையாக செயல்படக்கூடிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா தரை வழி போரை தொடர்ந்தால், அதன் ஆதிக்க நிலை பாதிக்கப்படக்கூடும். அந்த இடத்தை சீனா கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஈரானியர்கள் போரில் அரசியலை இணைத்து முன்னெடுக்கின்றனர் என்பதால், அவர்கள் எளிதில் வீழ்ச்சியடைய மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக, “ஊடறுப்பு” நிகழ்ச்சி மேலும் ஆழமாக ஆராய்கிறது.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri