கியூ.ஆர் குறியீடு தொடர்பில் பொதுமக்களுக்கு எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துபவர்கள் QR குறியீட்டையை வேறு யாரும் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தாதவாறு பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.

கடும் சட்ட நடவடிக்கை
பதிவு செய்யப்பட்ட QR முறையில் பிரச்சினைகள் காணப்படுமாக இருந்தால், மீள பதிவு செய்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் பெறுவதற்காக போலியான QR குறியீட்டைப் பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும்,போலி QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருளைப் பெற முயற்சித்தவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்,அத்தகைய QR குறியீடுகளை அடையாளம் காண தகவல் தொழில்நுட்ப முகவரகத்துடன் (ICTA) இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 14 மணி நேரம் முன்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan