பிரான்ஸில் தீவிரமாகும் கோவிட்! சுகாதார அமைச்சர் வெளியிட்ட புள்ளி விபரத்தால் அச்சத்தில் இளைஞர்கள்
உலகின் பல்வேறு நாடுகளில் கோவிட் பரவல் மீண்டும் தீவிரமாகி வருகின்றது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் போன நாடுகளில் புதிய கோவிட் பரவலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மற்றும் இறப்பு அதிகமாகி வருகின்றது.
இந்நிலையில்,பிரான்ஸில் கோவிட் தொற்றின் நான்காவது அலை தீவிரமாக பரவி வருவது குறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவலையடுத்து மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இது தொடர்பில், பிரான்ஸ் சுகாதார அமைச்சர், Olivier Véran கருத்து தெரிவிக்கையில்,
கடந்த திங்கட் கிழமை மட்டும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரி எண்ணிக்கை 18000 ஆக பதிவாகியுள்ளது.
இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, 150 சதவீதம் அதிகம் ஆகும். இந்த அளவிற்கு கோவிட் தீவிரம் இருக்கும் என்பதை நாங்கள் நினைத்து கூட பார்த்ததில்லை.
எதிர்பார்த்ததை விட தற்போது பரவும் கோவிட் வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகின்றது. குறிப்பாக இந்த டெல்டா வைரஸ் இளைஞர்களிடையே அதிகமாக பரவி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இது மட்டுமின்றி பிரான்சில் பீட்ட வகை கோவிட் வைரஸ் பரவலும் தீவிரமாகி வருகின்றது.
நேற்று முன் தினம் கோவிட் தொற்றின் நான்காவது அலைக்குள் நுழைந்திருப்பதாக அரசு சார்பில் எச்சரிக்கப்பட்ட நிலையில், அதை நிரூபிக்கும் வகையில் கோவிட் பரவல் மிகத் தீவிரமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 7 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri