முன்னாள் அரசாங்கத்தின் அமைச்சர்களிடம் பெறப்படவுள்ள வாக்குமூலங்கள்
அரச வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து விநியோகித்தமை தொடர்பில் கடந்த அரசாங்கத்தின் 18 அமைச்சரவை அமைச்சர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவை, நேற்று (11.11.2024) நீதிமன்றம் விடுத்துள்ளது.
இந்த மருந்துகள் தேவையான பாதுகாப்பு மற்றும் தரத் தரங்களை பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றின் கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பான விசாரணைகளை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுமதி வழங்கிய அமைச்சரவை
இந்தநிலையில் விசாரணைகளுக்கு உள்ளாகவிருக்கும் அமைச்சர்கள், குறித்த மருந்துகளை கொள்வனவு செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் அனுமதி வழங்கிய அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam