முன்னாள் அரசாங்கத்தின் அமைச்சர்களிடம் பெறப்படவுள்ள வாக்குமூலங்கள்
அரச வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து விநியோகித்தமை தொடர்பில் கடந்த அரசாங்கத்தின் 18 அமைச்சரவை அமைச்சர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவை, நேற்று (11.11.2024) நீதிமன்றம் விடுத்துள்ளது.
இந்த மருந்துகள் தேவையான பாதுகாப்பு மற்றும் தரத் தரங்களை பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றின் கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பான விசாரணைகளை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுமதி வழங்கிய அமைச்சரவை
இந்தநிலையில் விசாரணைகளுக்கு உள்ளாகவிருக்கும் அமைச்சர்கள், குறித்த மருந்துகளை கொள்வனவு செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் அனுமதி வழங்கிய அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 10 மணி நேரம் முன்
ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி Cineulagam
19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் Cineulagam