ஷிரந்தியை காப்பாற்ற தேரர்களை நாடும் மகிந்த! போலி செய்தி தொடர்பில் வெளியான அறிக்கை
தனது மனைவி ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி தற்போதைய ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மல்வத்து பீடத்தின் பிரதான தேரரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படும் விடயம் போலியானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மல்வத்து பீடத்தின் பிரதான தேரரிடம் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படும் செய்தி தொடர்பில் கண்டியில் உள்ள மல்வத்து மகா விகாரை சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மகாநாயக்க தேரரின் அறிவுறுத்தல்களின் பேரில் மல்வத்து மகா விகாரையின் பிரதிப் பதிவாளர் மஹாவெல ரத்தனபால ஸ்தவீர இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை
செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி எந்த சந்திப்பும் அல்லது தொலைபேசி உரையாடலும் நடக்கவில்லை என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் இதுபோன்ற தவறான செய்திகளை உருவாக்கி பரப்ப முயற்சிக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரேனிகுண்டா பட நடிகை சனுஷாவை நினைவிருக்கா.. 30 வயதில் இப்படி ஆளே மாறிட்டாரே! லேட்டஸ்ட் ஸ்டில்கள் Cineulagam
