இலங்கை மத்திய வங்கியின் புதிய பங்குதாரர் ஈடுபாட்டுக் குழு நியமனம்
பொருளாதாரத்தின் முக்கிய பங்குதாரர்களுடனான தனது ஈடுபாட்டை விரிவுபடுத்தும் நோக்கில், இலங்கை மத்திய வங்கி 17 பேர் கொண்ட பங்குதாரர் ஈடுபாட்டுக் குழுவை நிறுவியுள்ளது.
இதற்கமைய முன்னர் தொழிற்பட்ட இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை ஆலோசனைக் குழு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழு என்பவற்றை மாற்றீடு செய்து பங்குதாரர் ஈடுபாட்டுக் குழுவினை நிறுவியுள்ளது.
புதிய பங்குதாரர் ஈடுபாட்டுக் குழு
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் சிறிமால் அபேரத்ன இந்த பங்குதாரர் ஈடுபாட்டுக் குழுவிற்கு தலைமை தாங்குகின்றார்.
இதேவேளை குறித்த குழுவின் உறுப்பினர்களாக, தனியார் துறையையும் கல்வித்துறையையும் சேர்ந்த தலைசிறந்த 17 பேர் அங்கம் வகிக்கின்றனர்.