ஜனாதிபதி வேட்பாளருடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு தயார்: பிரான்ஸில் சிறீதரன் பகிரங்கம்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர், தமிழ் மக்களுக்கான சமஷ்டி தீர்வை பெற்று தருவதற்கு இரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்ய தயார் என்றால் அவருக்கு நாம் பகிரங்கமாக ஆதரவளிக்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Sritharan) தெரிவித்துள்ளார்.
பிரான்சில் (France) தமிழர் வர்த்தக சங்கத்தினர் நடத்திய நிகழ்வொன்றில் புலம்பெயர் தமிழர்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“2005ஆம் ஆண்டு தேர்தலை நாம் புறக்கணித்த போது எங்களுக்கு பக்க பலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சக்தி இருந்தது.
ஆனால், இன்று எங்களிடம் ஒரு சரியான பக்க பலம் இல்லை. இந்த சமயத்தில் நாங்கள் தமிழ்ப் பொது வேட்பாளரை களமிறக்கினால் தென்னிலங்கை அரிசியல்வாதிகள் எங்களிடம் இறங்கி வருவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
