கேள்விக்குறியாகியுள்ள நாட்டின் இறைமை.. சிறீநேசன் எம்பி ஆதங்கம்
இங்கு சர்வதேச சட்டம், நாட்டின் இறைமை என்பதெல்லாம் கேள்விக்கு உள்ளாகியுள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் ஞனமுத்து சிறீநேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலம் குறிப்பிடுகையில், "சர்வதேச ஒழுங்கில் இப்போது அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சர்வதேச விதிமுறைகள் வதிவிலக்காகி உள்ளன.
ஈராக்கை அமெரிக்கா தாக்கியபோது ஈராக்கில் அணுவாயுகங்களிருப்பதாகக் கூறியே தாக்குதலை நடாத்தியது. நாடு கைப்பற்றப்பட்டது.
மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தவுள்ள தாழமுக்கம்! வடக்கு - கிழக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை
அமெரிக்காவின் நடவடிக்கை
சதாம்உசைன் அமெரிக்கப் பொம்மை அரசினால் மரண தண்டனக்கு உள்ளாக்கப்பட்டார். ஆனால் ஈராக்கில் அணுவாயுதங்கள் கண்டு பிடிக்கவில்லை. அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்க்கு சர்வதேச சட்டம் எதுவும் செய்யவில்லை.

இப்போது போதைப்பொருள் வியாபாரக் குற்றச்சாட்டில், அமெரிக்காவால் கைது செய்யப்பட்டுள்ளார். இனி அமெரிக்கா நினைத்தது போல் மதுரோவுக்குத் தீர்ப்பும் எழுதப்பட்டுவிடும். அமெரிக்காவின் ஆளுமையிலுள்ள ஐ.நா.சபை என்னதான் செய்யும்.
வல்லவனை அந்த சபை வாழ்விக்கும், வலுவிழந்தவனை வீழ்விக்கும். ஸ்ரீலங்கா அரசு அத்துணை தூரம் வல்லமை இல்லாது விட்டாலும், பல நாடுகளின் வல்லமையைப் பெற்று தமிழீழ விடுதலைப் புலிகளை வீழ்ச்சியடையச் செய்தது. மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக இதுவரை எந்த நியாயமும் கிடைக்கவில்லை. நல்லவை அல்லாத வல்லவையும் வெல்லுகின்றன.
நல்லவையானது வல்லமை இல்லாது விட்டால் அவையும் வீழத்தப்படுகின்றன. உலக ஒழுங்கு இலாபத்தின் பக்கமாகவும், சலுகைகளின் பக்கமாகவும் நகரு கின்றன.உரிமையின் பக்கமாகவோ,நியாயத்தின் பக்கமாகவோ நகர முடியவில்லை. இது நியாயமற்றதாக இருந்தாலும், யதார்த்தமாகியுள்ளது” என தெரிவித்துள்ளார்.