ஸ்கொட்லாந்து பெண் தொடர்பில் இலங்கை இளைஞர் வெளிநாட்டு சம்மேளனம் அதிருப்தி
ஸ்கொட்லாந்து சுற்றுலா பயணி கெய்லி பிரேசரை இலங்கை அதிகாரிகள் தவறாக நடத்துவது குறித்து இலங்கை இளைஞர் வெளிநாட்டு சம்மேளனம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றின் மூலம் இந்த அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
பிரேசருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணைகள் மற்றும் குடிவரவு அதிகாரிகளால் பயன்படுத்தப்படும் அச்சுறுத்தல் தந்திரங்கள் நியாயமற்றவை என்று சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இலங்கை இளைஞர் வெளிநாட்டு சம்மேளனம்
ஸ்கொட்லாந்து அரசாங்கம் இந்த பிரச்சினையில் தலையிட்டு, அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் எனவும் இலங்கை இளைஞர் வெளிநாட்டு சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகளை நிலைநாட்டுமாறு இலங்கை அரசாங்கத்தை சம்மேளனம் கோரியுள்ளது.
இதேவேளை இந்த விடயத்தை ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்து கெய்லி பிரேசருக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்காக, ஸ்கொட்லாந்து தொழிலாளர் கட்சியின் அங்கீகாரத்துடன் ஐக்கிய இராச்சியத்தில் சட்டப் பிரசாரத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் இலங்கை இளைஞர் வெளிநாட்டு சம்மேளனம் எச்சரித்துள்ளது.
மனு தாக்கல்
முன்னதாக சமூக ஊடகங்களில் காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பாக உள்ளடக்கத்தை வெளியிட்ட ஸ்கொட்லாந்து சுற்றுலாப் பயணி கெய்லி பிரேசருக்கு வழங்கப்பட்ட விசாவை நிறுத்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஆகஸ்ட் 10 ஆம் திகதியன்று முடிவு செய்தது.
எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறும் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும் ஆகஸ்ட் 12 ஆம் திகதி ஸ்கொட்லாந்து சுற்றுலாப் பயணி மேன்முறையீட்டு
நீதிமன்றத்தில் தன்னை இலங்கையில் இருந்து நாடு கடத்துவதற்கு குடிவரவு மற்றும்
குடியகல்வு திணைக்களம் எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்க உத்தரவிடுமாறு
கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.