யாழில் கடற்றொழிலாளர்களால் இந்திய துணைத் தூதுவரிடம் மகஜர் கையளிப்பு (Photos)
யாழ்ப்பாண கடற்றொழிலாளர் சங்கங்கள் மற்றும் சமாசங்கள் ஆகியன ஒன்றிணைந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மகஜர் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர்..
குறித்த மகஜர் இன்றையதினம் (15.09.2023) யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தில், துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை - இந்திய கடற்றொழிலாளர் பிரச்சனை
இலங்கையின் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களிற்கும் இந்திய கடற்றொழிலாளர்களிற்கும் இடையிலே இழுவைப் படகினால் கடல் வளமும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் பிரச்சனை நீண்டகாலமாக தொடர்ந்த வண்ணமே உள்ளது.
தாங்கள் பதவியேற்ற பின்பு 2016 ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி டில்லியில் இரு நாட்டின் வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் இராஜதந்திரப் பேச்சுக்கள் இடம்பெற்று ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
அதை இரு நாட்டு கடற்றொழிலாளர் சமூகமும் ஏற்றுக்கொண்டு அதன் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
தற்போது இரு நாட்டு அரசுகளும் இப் பேச்சின் போது எட்டப்பட்ட தீர்மானங்களை முன்கொண்டு செல்ல வடக்கு கடற்றொழிலாளர் சமூகம் தங்களை வேண்டி நிற்கின்றது.
தற்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை, இந்திய கடற்றொழிலாளர் பிரச்சனை அரசியலாக்கப்பட்டு அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் கடற்றொழிலாளர் என்ற பெயரிலும் கூட்டுறவு ஜனநாயக கட்டமைப்புக்களை செயலிலக்க வைத்து அதன் ஊடாக அரசியல் கட்சி ஓன்றின் பிரதிநிதிகளும் அதன் ஆதாரவாளர்களும் இணைந்து உண்மையான கடற்றொழிலாளர் பிரதிநிதிகளை ஓரம்கட்டும் செயல்பாடு அரசியல் கட்சியினால் முன்னெடுக்கப்படுகின்றது.
இழுவைமடித் தொழில்
குறிப்பாக இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் தான் சார்ந்த ஈ.பி.டி.பி கட்சியினரை மட்டுமே உள்வாங்கிச் செயல்பட்டு சங்கங்களை உருவாக்கி வருகின்றார். தற்போது இரு நாட்டு கடற்றொழிலாளர் பிரச்சனையும் பேச்சுவார்த்தைகள் என்ற ரீதியிலே பேசுபொருளாக உள்ளது.
ஆகையால் 2016 ஆம் ஆண்டு எட்டப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் 2016 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையில் பங்குகொண்ட பிரதிநிதிகளை இணைத்து தீர்வு எட்டப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதோடு தற்போது உள்ள கட்சி ஆதாரவாளர்களைக் கொண்டுள்ள அமைப்புக்களுடன் கலந்துரையாடுவதனையோ அவர்கள் கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் எனக் கூறுவதனையோ இதன் கீழ் கையொப்பமிடும் சங்கங்கள் சமாசங்கள் விருப்பவில்லை எனபதனையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
தற்போது இருநாட்டு தொப்புள்கொடி உறவுக்கு தடையாக இருக்கும் இழுவைமடித் தொழிலை இலங்கை கடற்பரப்பிற்குள் நிறுத்தி இருநாட்டு தமிழ் கடற்றொழிலாளர்களும் ஒற்றுமையுடனும், சகோதரத்துடனும் வாழ்வாதரத்தை நடாத்த ஆவண செய்வீர்கள் என நம்புகின்றோம் என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 4 மணி நேரம் முன்

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
