இலங்கையில் அழியும் நிலையில் பறவை இனங்கள்
இலங்கையில் காணப்படுகின்ற 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளதாக இலங்கையின் உயிர்பல்வகைமை செயலக பணிப்பாளர் சீன ஊடகம் சின்ஹுவாவிற்கு தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியாக 244 வகையான பறவைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிர்பல்வகைமை செயலகத்தின் பணிப்பாளர் ஆர்.எச்.எம்.பி. அபேகோன் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
சிவப்பு தரவு புத்தகம் என்பது அழிந்து வரும் மற்றும் அரிய வகை தாவரங்கள் விலங்குகளை பதிவு செய்யும் பொது ஆவணத்தின் தரவுகளின் படி இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அபேகோன் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

உயிர்பல்வகைமை
இலங்கை 435 வகையான பறவையினங்களைக் கொண்ட உயிர்பல்வகைமை பெருக்கத்தின் முக்கிய இடமாக காணப்படுகின்றது.
மனிதர்களால் சுற்றுச்சூழல் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் மற்றும் பறவைகளின் வாழ்விடங்களை சேதப்படுத்துவதால் பறவைகள் அழியும் அபாயத்தை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் அழிவடையும் நிலையிலுள்ள பறவை இனங்களை பாதுகாப்பதை முழு சமூகமும் பொறுப்பேற்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri