யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாலி நாட்டுக்கு 243 துருப்புக்களை அனுப்பியுள்ள இலங்கை இராணுவம்
இலங்கை இராணுவம் இன்று 243 துருப்புக்களை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாலி நாட்டுக்கு அனுப்பியுள்ளது.
இலங்கை இராணுவத்தின் புதிய 243 தொழில்சார் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களே மாலிக்கு அனுப்பப்பட்டனர்.
இதேவேளை, மேலும் 31 ராணுவக்குழு, சில நாட்களுக்குப் பின்னர் அங்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஏற்கனவே மாலியில் பணியாற்றும் சி.சி.சி என்ற தொழில்சார் பயிற்சி துருப்புக்களின் 240 உறுப்பினர்கள் தங்கள் அமைதி காக்கும் பணிகளை முடித்து விரைவில் இரண்டு கட்டங்களின் கீழ் வீடு திரும்பவுள்ளனர்.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று காலை துருப்புக்கள் புறப்படுவதை
மேற்பார்வையிட்டார்.