விமான பயணிகளின் மிகவும் விருப்பமான நிறுவனமாக மாறிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானப் போக்குவரத்து துறையில் மிகவும் விரும்பப்படும் நிறுவனம் என பெயரிடப்பட்டுள்ளது.
LMD நடத்திய சமீபத்திய ஆய்வில் இந்த விடயம் விடயம் தெரியவந்துள்ளது. 2025ஆம் ஆண்டு ஆண்டின் வருடாந்திர தரவரிசையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
விமான பயணிகளின் நட்பு ரீதியான விருந்தோம்பல், விரிவான விமான வலையமைப்பு நேரடி விமானங்கள் மற்றும் தடையற்ற இணைப்பு காரணமாக இலங்கை விமானப் பயணிகளின் சிறப்பான தேசிய விமான நிறுவனம் என்ற நிலையை இந்த அங்கீகாரத்தின் மூலம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
தொழில் வல்லுநர்கள் மற்றும் உள்ளூர் நிறுவனத் தலைவர்களை கொண்ட LMD வாடிக்கையாளர்களின் திறந்த பதில்களின் அடிப்படையில் LMD இன் மிகவும் பிரபலமான தயாரிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

விமான நிறுவனம் அதன் பயணிகளுக்கு இணையற்ற விருந்தோம்பல், அவர்களின் ரசனைக்கு ஏற்ற சர்வதேச மற்றும் உள்ளூர் உணவு வகைகள் மற்றும் அவர்களின் இலக்குக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விமான சேவை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 59 நாடுகளுக்கும் 113 இடங்களுக்கும் செயல்படுகிறது. இது கொழும்பிலிருந்து வாரந்தோறும் சுமார் 300 நேரடி விமான சேவைகளை முன்னெடுக்கிறது.

இந்திய துணைக்கண்டத்தின் முக்கிய நகரங்கள், மத்திய கிழக்கு, ஐரோப்பா, தூர கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் அவுஸ்திரேலியாவை உள்ளடக்கியது.
கொழும்பிலிருந்து நேரடி விமானங்கள் மற்றும் அவர்களின் இடங்களுக்கு தடையற்ற இணைப்பைத் தேடும் பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முதல் தேர்வாக மாறியுள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri
வீட்டைவிட்டு வெளியேறுவது குறித்து நிலா சொன்ன பதில், சேரன், சோழன் செய்தது என்ன?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
இலங்கையை சேர்ந்த கயல் சீரியல் நடிகை சுபாஷினியின் தற்கொலைக்கு காரணம் என்ன?... வெளிவந்த தகவல் Cineulagam