10 நிமிடங்களில் 10 லட்சம் ரூபாயை இழந்த ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் நேற்று பத்து நிமிடங்களுக்குள் ஒரு மில்லியன் ரூபாவை இழந்துள்ளனர்.
இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் நேரத்திற்கு வேலை என்ற தொழிற்சங்க நடவடிக்கையினால் இந்த இழப்பை சந்தித்துள்ளனர்.
நேற்று காலை 9.00 மணியளவில் பாகிஸ்தானின் கராச்சி நகருக்குப் புறப்படவிருந்த விமானத்தில் 3025 கிலோ கிராம் பெறுமதியான வெற்றிலை பொதியை கொண்டு செல்வதனை நிராகரித்தமையினால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை விமானிகள் சங்கத்தில் சுமார் 180 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் நிலையில், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு கொடுப்பனவில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
எந்தவொரு விமானமும் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் தாமதமாக பயணிக்கலாம் என்ற நிலையில் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த வெற்றிலை பொதியை எடுத்து வரும் வரை ஒரு நிமிடமேனும் தாமதப்படுத்த முடியாதென கூறப்பட்டுள்ளது.
நேரத்திற்கு வேலை தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விமானம் பயணித்தமையினால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
