மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கலாம்; வளிமண்டலத் திணைக்களம் எதிர்வுகூறல்
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், நாட்டின் சில இடங்களில் சுமார் 75 மில்லி மீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதுடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் மழை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது.
இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில், மாலை வேளையில் அல்லது இரவில் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இடி மின்னல் தாக்கம் குறித்து மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam