சுற்றுலா பயணிகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
2024 ஆம் ஆண்டுக்கான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை மார்ச் 31 ஆம் திகதி வரை 635,784 ஆக பதிவாகியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் இலங்கைக்கு 635,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலாப்பயணிகளின் வருகை
இதற்கமைய, மார்ச் மாதத்தில் இலங்கைக்கு 209,181 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 200,000 சுற்றுலாப் பயணிகள் வீதம் வருகை தந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |