மாகாண சபை தேர்தல் சட்டமூலம் தனியார் சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
மாகாண சபை தேர்தல் சட்டத்தில் திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தீர்மானித்துள்ளார்.
குறித்த சட்டமூலம் தனியார் சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
2019 ஒக்டோபர் 11ம் திகதியன்று மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் தனிப்பட்ட உறுப்பினரின் முன்மொழிவாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
அதன்படி, குறித்த சட்டமூலத்தின் முதல் வாசிப்பு எதிர்வரும் 25ஆம் திகதி மேற்கொள்ளப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் மாகாண சபைத் தேர்தலை
முன்னைய வாக்களிப்பு முறையிலேயே நடாத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam

நிபந்தனையுடன் சண்டை நிறுத்த பேச்சுவார்த்தை: ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..லண்டனில் தெரிவித்த அதிகாரிகள் News Lankasri
