ரணில் ராஜபக்சவை விரட்டும் வரை போராட்டம் ஓயாது! காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை (VIDEO)
நுகேகொடையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை,காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் பாதுகாப்பினை வலியுறுத்தி எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு அனைவரும் தமது ஆதரவினை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்,காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் முடிவிற்கு வந்துள்ளதாகவும்,போராட்டக்காரர்களை அடக்குமுறையின் மூலம் அடக்கி ஒடுக்கிவிட்டதாகவும் மார்த்தட்டிக்கொள்ளும் ராஜபக்ச,ரணில் அரசாங்கத்தினை விரட்டும் வரை போராட்டம் ஓயாது என்றும் விடுத்துள்ளனர்.